Thursday, September 10, 2009

தமிழ் பாடல்

 கவிஞரும் பாட்டெழுதுவார் இப்படி.

ஒரு நதி, ஒரு பெளர்ணமி ஒரு ஓடம் என்னிடம் உண்டு....

ஒரு நதி ஒரு பெளர்ணமி ஒரு ஓடம் என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன் அட உங்களில் யாருண்டு
ஒரு காடு சில மேடு சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன் அட உங்களில் யாருண்டு...

ஒரு புதையல் ஒரு குவியல் மலை வாசல் என்னிடம் உண்டு...
ஒரு புதையல் ஒரு குவியல் மலை வாசல் என்னிடம் உண்டு
அலிபாபா அலிபாபா அட உங்களில் யாருண்டு....

ஒரு நதி ஒரு பெளர்ணமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன் அட உங்களில் யாருண்டு.
ஒரு புதையல் சில குவியல் மலை வாசல்
என்னிடம் உண்டு அலிபாபா அலிபாபா
அட உங்களில் யாருண்டு......

ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்..........
ஒரு புதையல் ஓர் குவியல் மலைவாசல்………..
பாராமல் போன பெளர்ணமியெல்லாம் பரித்துக்கொடுக்கும் ஒருவன்

கேளாமல் போன பாடலையெல்லாம் திரட்டி கொடுக்கும் ஒருவன்,,,
பாராமல் போன பெளர்ணமியெல்லாம் பரித்துக்கொடுக்கும் ஒருவன்
கேளாமல் போன பாடலையெல்லாம் திரட்டிகொடுக்கும் ஒருவன்
நீயில்லை.. நீயில்லை

நான் மழையில் நனைந்த வானவில்லை என் மடியில் கட்டும் ஒருவன்,
என் மேகக்கதவு ஜன்னல் எல்லாம் திறந்துவைக்கும் ஒருவன்
நீயில்லை என் தேடல் அது வேறு போடா நீயில்லை....
ஓர் நதி ஓர் பொளர்ணமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு ஓடக்காரன் ஓடக்காரன் அட உங்களில் யாருண்டு

தீராமல் போன ஆசைகளெல்லாம் தீர்க்கதெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய்வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன்

தீராமல் போன ஆசைகளெல்லாம் தீர்க்கதெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன்
நீதானா.... நீதானா...

ஒரு கற்பு கன்னி தர்மமெல்லாம் கண்டு கொள்ளாத ஒருவன்
போதும் போதும் என்னும் வரையில் புதுமை செய்யும் ஒருவன்
நீதானா நீதானா....
நான் தேடும் சிங்காரன்! இங்கே யானோ ஏனில்லை

ஒரு நதி ஒரு பொளர்ணமி ஒரு ஓடம் என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன் அட உங்களில் யாருண்டு...
ஒரு காடு சிறு மேடு சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன் அட உங்களில் யாருண்டு…
ஒரு புதையல் ஒரு குவியல் ஒரு வாசல் என்னிடம் உண்டு...
ஒரு புதையல் ஒரு குவியல் ஒரு வாசல் என்னிடம் உண்டு
அலிபாபா அலிபாபா அட உங்களில் யாருண்டு...
எங்களில் யாருண்டு....???
ஒரு நதி ஒரு பொளர்ணமி
ஒரு நதி ஒரு பொளர்ணமி....

நன்றி வணக்கம் பரவை அசோக்குமார்

திருமலை படப்பாடல்

அழகூரில் பூத்தவளே

அழகூரில் பூத்தவளே எனை அடியோடு சாய்த்தவளே மழையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே
உன்னை அள்ளிதானே உயிர் நூலில் கோர்ப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்,
அழகூரில் பூத்தவளே எனை அடியோடு சாய்த்தவளே......
நீயுடுத்தி போட்ட உடை என் மனதை மேயுதடா
நீ சுருட்டி போட்ட முடி... மோதிரமா... ஆகுமடி

இமைபோல நீ சிருச்சு இதழலாலே நான் அணைக்க கூச்சமிங்கே கூச்சப்பட்டு போகிறதே...
நடையாலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க காச்சலுக்கும் கச்சல் வந்து வேகிறதே...
என்னைத்திரியாக்கி உன்னுள் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்பேன்...

ஹோ... ஹோ... ஹோய்... அழகூரில் பூத்தவளே எண்ணை அடியோடு சாய்த்தவளே....
நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சி சாஞ்சிருவேன்...
நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே.... நான் இறங்கி தூங்கிருவேன்...
குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க்க சென்னை தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி....

அறியாமல் நானிருக்க அழகாக நீ பிறக்க காதல் மழை ஆயுள்வரை தூவுமடா...
என்னை மறந்தாலும் உன்னை மறவாதா நெஞ்சோடு நானிருப்பேன்...

ஹோ ஹோ ஹோய்.. அழகூரில் பூத்தவனே...
ம்ம்.... ஹோ.. என்னை அடியோடு சாய்த்தவளே..
ம்ம்ம்... மழையூரின் சாரலிலே..
என்னை மார்போடு சேர்த்தவளே
உனை அள்ளிதானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்....

நன்றி வணக்கம்
பரவை அசோக்குமார்