சிங்கையிலே!
சிராங்கூன் வீதியிலே!
குட்டி இந்தியா
கடைத் தொகுதியிலே!
பொழுது புலரும் வேளையிலே!
பொங்கி வரும்
பொங்கலே!
பொங்கல் சீருகொண்டு வந்தோம்
பொங்க சோறும் பொங்கிவந்தோம்
கரும்புத்துண்டும் வெட்டி வந்தோம்
கூட ஒரு
கவிதையொன்றும் படைத்து வந்தேன்!
விவசாயி மகனாய் நான் பிறந்தேன்
விவசாயம் செய்து வாழ்ந்தேன்
விவசாயத்துக்கு விடைகொடுத்து
கட்டுமானம் கற்றறிந்தேன்
கட்டுமான தொழில் தேடி
சிங்கை வந்தேன்
உறவுகளோ அங்கிருக்க - என்
உழுத நிலமும் அங்கிருக்க
பெத்தவளின் பாசம் என்னை
அங்கிழுக்க பணம்
என்னை இங்கிழுக்க
பாசமா பணமா
என்ற போட்டியிலே பணம் (தற்காலிகம்) ஜெயிக்க
மாட்டுக் கொம்பிலே சாயம் தடவி
மாலையிட்டு மனிகட்டி
கட்டிளங்காளைகளை
அவிழ்த்துவிட்டு
வீரம் பொங்க விரட்டிவர
வீதியில்லை சிங்கையிலே
எங்களுக்கு வேறு வழியுமில்லை
சிஙகையிலே
காலையின்றி பொங்கலா?
வீரமின்றி உழவர் திருநாளா?
வினா வந்து போகுமுன்னே
சிங்கார சிங்கையிலே
சின்ஞ்சிறு பகுதியிலே
சிங்கைத் தமிழரின்
ஏற்ப்பாட்டிலே
கட்டவண்டி ஒன்னு வச்சு
பசுக்களை பக்கத்தில் வச்சு
அம்மாவுக்கும் அடுத்தபடியா
ஆடுகளை அமர்த்தி அழகு பார்த்து
வீரமா காளியம்மன் கோவிலிலே
பொங்கலிட்டு - கேம்பல் வீதியிலே
படையலிட்டு
இங்கே கூடியிருக்கும்
அன்பருக்கும் கொடுத்து
கொண்டாடுவோம்
பொங்கல் திருநாளை
தொலைதூரம் வந்துவிட்டோம்
நாட்டை விட்டு, வீட்டை விட்டு
தொலைதூரம் வந்துவிட்டோம்
தொலைந்துபோய் நிற்கின்றோம் - ஆனாலும்
தொப்புள் கொடி உறவானதால்
உன்னை மற்க்கமுடியவில்லை
தாய்(மண்ணை) மறக்கமுடியவில்லை
எனதருமை தாய் மண்ணே - தமிழ் மண்ணே
செம்மொழி புகழ் பெற்று
சிறந்தோங்கி புகழ்பாடும்
உன்பெயரால் (தமிழரென்று) கூடியுள்ளோம்
பொங்கல் வைத்துக் கொண்டாட!
பொங்கலோ பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.
நன்றி நன்றி நன்றி
அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
தமிழ் வணக்கத்துடன்
உங்கள் பரவை அசோக்குமார்
Wednesday, January 13, 2010
Subscribe to:
Posts (Atom)
